Thursday 23 July 2015

தொழில் வியாபாரத்தில் வெற்றி பெற :



நீர் வீழ்ச்சி,ஆறு அல்லது கடல்போன்ற ஓடும் நீர் நிலைகளில் இருந்து 5 சிறிய கற்களை எடுத்து வந்து வீட்டில் பூஜை அறையில் வைத்து பூ,சந்தனம்,குங்குமம் சாற்றி வழிபடவும். நீர் நிலைகளில் இருந்து வருபவை அனைத்தும் மஹாலக்ஷ்மியின் அம்சம். பின்பு தொழில் வியாபாரம் சிறக்க நன்று பிரார்த்தனை செய்து அந்த கற்களுக்கு தயிர் அன்னம் சிறிது நிவேதனம் செய்ய வேண்டும். மறு நாள் அவற்றை அனைத்தையும் எடுத்து அதே போன்று ஓடும் நீர் நிலைகளில் போட்டு விட வேண்டும். இதை வெள்ளியன்று செய்தால் உத்தமம். பிரார்த்தனை மட்டுமே செய்ய வேண்டும். வேறு எந்த மந்திர உச்சரிப்பும் கூடாது. அதே போன்று மேற்கண்ட நிவேதனத்தை பிரசாதமாக உண்ண கூடாது. அவை அனைத்தையும் நீருக்கே கொடுத்து விட வேண்டும்.
மேற்கண்ட பரிகாரம் ஒரு முறை மட்டுமே செய்ய வேண்டும்

No comments:

Post a Comment