Saturday 20 December 2014

பாவம் போக்கும் சிவன் மந்திரம்

பாவம் போக்கும் சிவன் மந்திரம்


நமச்சிவாய வாழ்க!
நாதன் தாள் வாழ்க!
இமைப்பொழுதும் நீங்காதான் தாள் வாழ்க!
கோகழி ஆண்ட குருமணிதான் தாள் வாழ்க!
ஓம் தத்புருஷாய வித்மஹே மஹா தேவாய தீமஹி!
தன்னோ ருத்ர ப்ரச்சோதயாது!
ஓம் த்ரயம்பகாய வித்மஹே ம்ருத்யுஞ்சாய தீமஹி!
தன்னோ பரமசிவ ப்ரச்சோதயாத்




sivan mantras to remove sinதன் வினைதான் தன்னைச் சுடும். நாம் செய்யும் ஒவ்வொரு வினைக்கும் உறுதியாக எதிர்விளைவு ஒன்று உள்ளது. நல்லது செயின் நல்ல விளைவுகள் ஏற்படும். தீமைகளும், பாவங்களும் செயின் அதற்கேற்ற தீய விளைவுகளே வாழ்வில் கிடைக்கும். ஒருவர் செய்யும் பாவங்கள் மட்டுமின்றி, அவருடைய பெற்றோர், மூதாதையர் செய்த பாவ வினைகளும் அவர்களைத் தொடர்ந்து வரும். நாம் அறிந்தோ அறியாமலோ செய்யும், தீய செயல்களான தீமையானதைத் திட்டமிடும் சிந்தனை, பிறருடைய மனதைப் புண்படுத்தும் சொல், பிறரைத் துன்பத்திற்கு ஆளாக்கும் செயல், செய்ய வேண்டிய கடமையைப் புறக்கணித்தல், தற்பெருமை, சீற்றம், காம வெறி, பேராசை, பெருந்தீனி விரும்பல், பொறாமை, சோம்பல் போன்ற செயல்கள் அனைத்தும் பாவ செயல்களாகக் கருதப்படுகின்றன. இப்படி ஒருவர் செய்யும் ஒவ்வொன்றிற்கும் அதற்கேற்ற தீய விளைவுகள் அவர்கள் அனுபவிக்க நேரிடும்.
அத்தைகைய பாவ விளைவுகளை களைய, ஒருவர் தன்னுடைய ஆணவத்தை துறந்து, சிவனை மனதார வணங்கி, தான்செய்த தீய வினைகளை அவனடியில் சமர்ப்பித்து, மேலே கூறப்பட்டுள்ள சிவன் மந்திரங்களை சொல்லி இறைவனை வணங்க வேண்டும். சிவனுக்கு உரிய நாள் திங்கட்கிழமையாகும். எனவே ஒரு திங்கள் கிழமையில் அல்லது சிவராத்திரி அல்லது பிரதோஷ தினத்தில் சிவன் சன்னதியில் உங்கள் பிரார்த்தனையை ஆரம்பித்து தினமும் கடைபிடித்து வர வேண்டும்.
உங்களுடைய பாவ வினைகள் நீங்கி உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியும் நிம்மதியும் நிறைந்திடும். வாழ்வில் நிறைவு ஏற்படும்.









திருப்பம் தரும் திருமால் மந்திரம்




திருப்பம் தரும் திருமால் மந்திரம்


"ஓம் ஹ்ராம் ஹ்ரீம் க்லீம்
ஓம் நம ஸ்ரீ வேங்கடேசாய"




Thiruppam tharum thirumal manthiram
இந்த மந்திரம் நமக்கு நல்ல திருப்பங்களை தந்தருளும் திருப்பதி திருமலை திருவேங்கடவனின் மீது பாடப்பட்ட அரிய மந்திரமாகும். திருவேங்கடவனின் திருவருளை பெறும் பலவித வழிகளில் இந்த மந்திரமும் ஒன்று.
முதலில் பிள்ளையாரையும், குல தெய்வத்தையும் மனதார வணங்கி விட்டு இந்த மந்திரத்தை துளசி மணி மாலை கொண்டு தினமும் காலையில் 108 முறை ஜபம் செய்யவும்.
இம்மந்திரத்தை ஒரு வளர்பிறை திங்கட்கிழமையன்றோ, அல்லது ஒரு திருவோண நட்சத்திரத்தன்றோ அல்லது வளர்பிறை ஏகாதசியன்றோ அதிகாலையில் சொல்லத் துவங்குதல் கூடுதல் நலம் பயக்கும். இம்மந்திரத்தை துதிப்பதோடு ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் வரும் முதல் திங்கட்கிழமைகளில் மலையேறி சென்று திருமலையானின் தரிசனத்தையும் பெற்று வந்தால் சர்வ நிச்சயமாக ஒருவரது பொருளாதார நிலையில் திருப்திகரமான நல்ல மாற்றங்கள் உண்டாகும்.
http://www.penmai.com/vratham-poojas-traditions


ஆதித்ய மந்திரம்

சூரிய பகவானின் திருவருளைப் பெற மந்திரம் அருளை பெற மந்திரம்




‘ஓம் ஆதித்யாய நம’




Lord Surya 
இந்த மந்திரம், ஆதவனின் அருளைப் பெற உதவும் மந்திரம் ஆகும். இம்மந்திரத்தை ஒரு வளர்பிறை ஞாயிறு தினத்தன்று காலையில், சூரிய ஹோரை நேரத்தில், கிழக்கு நோக்கி அமர்ந்து, 108 முறை சொல்லி சூரிய பகவானை வணங்க வேண்டும்.
இந்த ஆதித்ய மந்திரத்தை 108 முறைகள் சொல்வதால், நம் ஆன்மப் பிரகாசம் தூண்டப்பட்டு உடலும், மனமும், முகமும் தெளிவுடனும், சுறுசுறுப்பாகவும் இருக்கும். மன எழுச்சியினால் ஒருவரின் உள்ளொளியை அதிகரிக்க கூடிய மகத்தான சக்தி வாய்ந்த மந்திரம் இந்த ஆதவ மந்திரம் ஆகும்.
வளர்பிறை ஞாயிற்று கிழமையில் துவங்கி, தொடர்ந்து ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளிலும் இந்த மந்திரத்தை சொல்லி சூரிய பகவானை வணங்கலாம். முடியாதவர்கள், வளர்பிறை ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் இதைக் கடைப்பிடிக்கலாம்.

காரியத்தடை போக்கும் சந்திரன் வழிபாட்டு பாடல்

காரியத்தடை போக்கும் சந்திரன் வழிபாட்டு பாடல்

சிவனின் சடைமேல் சிறப்புடன் விளங்கும்
மதியே உன்னை மகிழ்வுடன் துதித்தேன்!
நிறத்தில் வெண்மையும், நெல்லாம் தான்யமும்
சிறப்புடன் வழங்கச் செல்வம் கொடுப்பாய்!
முத்தாம் ரத்தினம் முழுமலர்
அல்லி வைத்தோம் உனக்கு வரம்தருவாயே!
புத்தி பலம்பெற பொன்பொருள்
குவிய சக்தி வழங்கும் சந்திரா வருக!


Chandra_graha
இந்த சந்திரன் வழிபாட்டு பாடலைச் சொல்லி சந்திரனை வழிபடுவதால், நாம் செய்யப் போகும் காரியங்களில் ஏதேனும் காரியத்தடை அல்லது இடையூறுகள் இருப்பினும் அவைகள் நீங்கப் பெற்று செய்யும் செயல்கள் அனைத்தும் ஜெயமாகும். ‘மனது காரகன்’ மற்றும் ‘மாதா காரகன்’ என்று அழைக்கைப்படுபவர் சந்திரன் ஆவார். எனவே, இந்தப் பாடலைச் பாடி சந்திரனை வணங்குவதால் சிந்தித்த காரியங்கள் குறையேதும் இன்றி வெற்றிகரமாய் அமையும். மனமகிழ்ச்சியும் நிறைவும் வாழ்வில் என்றும் நிலைக்கும்.


http://www.penmai.com/vratham-poojas-traditions

கடன் தீர்க்கும் அங்காரக ஸ்தோத்திரம்

கடன் தீர்க்கும் அங்காரக ஸ்தோத்திரம்

அங்காரக மஹீபுத்ர பகவன் பக்த வத்ஸல
நமோஸ்துதே மமாசேஷம் குணமாசு விமோசய
ருணரோகாதிதாரித்ர்ய பாபக்ஷ தபம்ருத்யவ:
பயக்ரோத மன:க்லேசா: நச்யந்து மமஸர்வதா
ருணதுக்க வினாசாய புத்ரஸந்தான ஹேதவே
மார்ஜயாம்யஸிதாரேகா: திஸ்ரோ ஜன்மஸமுத்பவா:
துக்கதௌர்பாக்யநாசாய ஸக ஸந்தான ஹேதவே
க்ருதரேகாத்ரயம் வாம பாதாத் ஸம்மார்ஜயாம்யஹம்


angaraka manthiram

இந்த மந்திரத்தை, செவ்வாய்க் கிழமைகளில் செவ்வாய் பகவானின் யந்திரம் அல்லது திருவுருவப் படத்தின் முன்பு காலை அல்லது மாலையில் விளக்கேற்றி வைத்த பின் சொல்லி வணங்க வேண்டும். செவ்வாய் பகவானின் யந்திரம் அல்லது திருவுருவப் படத்திற்கு சந்தனம், குங்குமம் இட்டு பூக்கள் தூவி சாம்பிராணி ஏற்றி வைத்து நெய் வேத்தியமாக சர்க்கரைப் பொங்கல் சமர்ப்பித்து ஸ்ரீ அங்காரகனை மனதார மேற்கூறிய மந்திரத்தை சொல்லி வழிபட வேண்டும்.
மேலும் அங்காரகனின் யந்திரம் அல்லது திருவுருவப் படத்துக்கு முன்பாக அடுப்புக் கரியினால் கிழக்கு மேற்காக மூன்று கோடுகள் கிழித்து, இந்த மந்திரத்தை சொல்லியவாறு அந்தக் கோடுகளை இடது கையால் அழித்து, செவ்வாய் பகவானை வணங்க கடன் தொல்லைகள் விரைவில் நீங்கும்.

இந்த மந்திரத்தின் பொருள்:
“பூமியின் மைந்தனும் பகவானும் பக்தர்களின் மீது பிரியம் கொண்டவருமான ஸ்ரீஅங்காரக பகவானே, தங்களை வணங்குகிறேன். வெகு சீக்கிரம் எனது எல்லாக் கடன்களையும் போக்கியருள வேண்டும். என்னை வாட்டும் கடன், ரோகம் முதலானவை, தரித்திரியம், பாபம், பசி, அபிமிருத்யு, பயம், கோபம், மனக்கவலை ஆகிய யாவும் அழியட்டும்.
கடனால் ஏற்பட்ட துக்கம் விலகுவதற்கும், தொடர்ந்து குழந்தைகள் பிறப்பதற்கும் வேண்டி, முன் ஜன்ம கர்ம வினைப்பாடுகளை அழிப்பதுபோன்று இந்த மூன்று கோடுகளையும் அழிக்கிறேன் (என்றபடி மூன்று கோடுகளையும் அழிக்கவேண்டும்). அத்துடன், ‘மிகுந்த தேஜஸ்வியும், ஸ்ரீபரமசிவனின் வியர்வையில் இருந்து உண்டானவருமான செவ்வாய் பகவானே, தங்களை வணங்குகிறேன்.
மிகுந்த கடனாளியான நான் உங்களையே சரணடைகிறேன். எனது கஷ்டங்களை நீக்கி அருளுங்கள்” என மனதார வேண்டிக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு செவ்வாய்க்கிழமைகளில் ஸ்ரீ அங்காரக பகவானை இந்த மந்திரம் சொல்லி வழிபடுவதால் நமது கடன்கள் யாவும் நீங்கி நன்மை பயக்கும். இல்லத்தில் தரித்திரமும், வறுமையும் அகன்று குபேர சௌபாக்கியம் உண்டாகும்.
 http://www.penmai.com/vratham-poojas-traditions

சுகப்பிரசவம் ஆக சொல்ல வேண்டிய மந்திரம்

சுகப்பிரசவம் ஆக சொல்ல வேண்டிய மந்திரம்

சுகப்பிரசவம் ஆக கர்ப்பிணிப் பெண்கள் தினமும் சொல்ல வேண்டிய மந்திரம்:


ஹே சங்கர ஸ்மரஹர பிரமாதி நாத
மன்னாத ஸாம்ப சசிசூட ஹர திரிசூலின்
சம்போ சுகப்ரஸவக்ருத் பவமே தயாளோ
ஸ்ரீமாத்ருபூத சிவ பாலயமாம் நமஸ்தே


http://www.penmai.com/wp-content/uploads/2014/06/thayumanavar-mantram.jpg 

இந்த சுலோகத்தை, கர்ப்பமாய் இருக்கும் பெண்கள், தினமும் மூன்று முறை சொல்லி இறைவன் சிவனை வழிபட்டால் அவர்களுக்கு பிரசவத்தில் எந்த பிரச்னையும் இன்றி சுகப்பிரசவம் நிகழும்.
திருச்சி மலைக்கோட்டையில் இடைக்கோயிலின் மூலவரான செவ்வந்திநாதர், செட்டிப்பெண்ணுக்கு அவளது தாய் உருவில் வந்து பிரசவம் பார்த்து தாயுமானவர் ஆனார். அந்நாளில் திருவரங்கத்திற்கும் திருச்சிராப்பள்ளிக்கும் இடையில் காவிரியாறு கரைபுரண்டோடிக் கொண்டிருக்கையில், நிறைமாத கர்ப்பிணியான தன் மகளை திருவரங்கத்தில் விட்டு விட்டுத் திருச்சிக்கு வந்த ஒரு தாயால், காவிரியின் வெள்ளம் காரணமாக திரும்பச் செல்ல இயலாதபோது, இறைவனே அத்தாய் வடிவில் அவள் மகளுக்கு மகப்பேறு செய்வித்து தாயையும் சேயையும் காத்தருளினார் சிவபெருமான்.
கர்ப்பிணிப் பெண்கள் தினமும் இந்த சுலோகத்தை சொல்லி வணங்குவதால், சிவனே தாயுமானவனாக இருந்து காத்தருள்வார்.


 

 

ராகு கால துர்க்கை பூஜை


 http://www.penmai.com/wp-content/uploads/2014/09/Durga_Mata.jpg





 

ராகு காலம் என்பது எல்லா நல்ல காரியங்களுக்கும் உகந்ததல்ல என்று நினைக்கப் பழக்கப் படுத்திக்கொண்டு விட்டோம். ஆனால் ராகு காலத்தில் செய்யக்கூடிய சில விஷேச பூஜைகள் இருக்கின்றன. அந்தப் பூஜைகளை ராகு காலத்தில் செய்தால் தான் அவற்றின் அற்புத பலன்கள் கிடைக்கும்.
   
மங்கல சண்டிகை ஸ்தோத்திரம்.
தேவீம் ஷோடச வஷியாம் ஸ¤ஸ்த்ர யௌவனாம்
பிம்போஷ்டிம் ஸ¤ததீம் சுத்தாம் ஸரத்பத்ம நிபாநநாம்
ஸ்வேத சம்பக வர்ணாம் ஸ¤நீலோத்பல லோசநாம்
ஜகத் தாத்ரீம் ச தாத்ரீம் ச ஸர்வேப்ய: ஸர்வ ஸம்பதாம்
ஸம்ஸார ஸாகரே கோரே ஜ்யோதிரூபாம் ஸதாபஜே
தேவ்யாஸ்ச த்யாநம் இத்யேவம் ஸ்தவநம் ஸ்ருயதாம் முநே
ரக்ஷ ரக்ஷ ஜகந்மாத: தேவீ மங்கள சண்டிகே
ஹாரிகே விபதாம் ராஸே: ஹர்ஷ மங்கள காரிகே
ஹர்ஷ மங்கள த§க்ஷச ஹர்ஷ மங்கள தாயிகே
சுபே மங்களே த§க்ஷச சுபே மங்கள சண்டிகே
மங்கள மங்களார்ஹேச ஸர்வமங்கள மங்களே
ஸதாம் மங்கள தே தேவீஸர்வேஷாம் மங்களாலயே
பூஜ்ய மங்களவாரே ச மங்களாபீஷ்ட தேவதே
பூஜ்யே மங்கள பூபஸ்ய மநுவம்ஸஸ்ய ஸந்ததம்
மங்களாதிஷ்டாத்ரு தேவீ ச மங்களாநாம் ச மங்களே
ஸம்ஸார மங்களாதாரே மோக்ஷமங்கள தாயினீ
ஸாரே ச மங்களாதாரே பாரே ச ஸர்வகர்மணாம்
ப்ரதி மங்களவாரே ச பூஜ்யே மங்கள ஸ¤கப்ரதே
பலஸ்ருதி
ஸ்தோத்ரேணா நேந சம்பிஷ்ச ஸ்துத்வா மங்கள சண்டிகாம்
ப்ரதி மங்கள வாரே ராஹ¤ காலௌ ச பூஜாம் தத்வ கதர் சிவா
தேவ்யாஸ்ச மங்கள ஸ்தோத்ர ய: ஸ்ருணோதி ஸமாஹித:
தத்மங்களம் பவேத் தஸ்ய ந பவேத் தத் மங்களம்
வர்த்ததே புத்ர பௌத்ரஸ்ச மங்களம் ச திநே திநே

ராகு காலம் மொத்தம் ஒன்றரை மணி நேரம் ஆகும். ராகு காலத்தின் எல்லாப் பகுதிகளும் கெட்டவை என்று சொல்ல முடியாது. சில குறிப்பிட்ட பகுதிகள் மிகவும் வலு வாய்ந்தவை; ஆற்றல் வாய்ந்தவை.

ராகு காலத்தில் செய்யப்படும் பூஜைகளில் முக்கியமானது துர்க்கை பூஜை. ‘ராகு கால துர்கா பூஜை’ என்று ஒரு தனி வழிபாட்டு முறையே இருக்கிறது.
இதில் மிகவும் சிறந்ததாக கருதப்படுவது செவ்வாய்க் கிழமை ராகு காலத்தில் செய்யப்படும் பூஜையாகும். இதற்குரிய தெய்வம் ‘மங்கல சண்டிகா’.
ஒருவருக்கு செவ்வாய் மற்றும் ராகு ஆகிய கிரகங்களால் இடையூறுகள் இருந்தால் செய்யப்படும் பூஜை செவ்வாய்க் கிழமை துர்கா பூஜையாகும். அது மட்டுமின்றி நீண்ட நாட்களாகத் தடங்கலாக இருந்த காரியங்கள் தொடர்ந்து தடையின் நடப்பதற்காகவும் இந்த பூஜை செய்யப்படுகிறது. நீண்ட நாட்களாக திருமணமாகத பெண்களுக்குத் திருமணமாவதற்காகவும், நல்ல மணாளன் அமையவும் இந்த பூஜையை செய்வார்கள்.

ராகு கால துர்க்கை பூஜை வழிப்பாட்டு முறை
  1. செவ்வாய்க் கிழமை ராகு நேரத்தில் (In General 3.00 Pm to 4.30 PM. But it varies depending on sunrise of your city) இந்த பூஜையை ஒன்பது வாரங்களுக்கு தொடர்ந்து விரதமிருந்து செய்ய வேண்டும். விருப்பம் உள்ளவர்கள் ஒன்பது வாரங்களுக்குப் பிறகும் தொடர்ந்து பூஜை முறைகளைக் கடைபிடிக்கலாம்.
  2. பூஜை அறையை சுத்தம் செய்து, துர்கா தேவி படத்திற்கு மஞ்சள், குங்குமம் இட்டு பூக்களால் அலங்கரிக்கவும்.
  3. பின் ஒரு எலுமிச்சம்பழத்தை அறுத்து, சாற்றைப் பிழிந்துவிட்டு, அந்த மூடியைப் திருப்பிப் போட்டு, அதற்கு மஞ்சள் மற்றும் குங்குமம் இடவும். பிறகு அதில் நெய்யை ஊற்றி, சிறிய திரியை இட்டு, விளக்கு ஏற்றி அன்னை துர்க்கையை வழிபடவும். அப்போது ‘மங்கல சண்டிகா ஸ்தோத்திரம்’ என்னும் வழிபாட்டு மந்திரப் பாடலைப் பாடி துர்க்கையை வழிபட வேண்டும்.
(‘மங்கலன்’ என்பது செவ்வாய் கிரகத்தின் பெயர்களில் ஒன்று. ஆகவே தான் ‘மங்கல சண்டிகா’ என்ற பெயர். செவ்வாய்க்கும் ராகுவுக்கும் கிரகப் பதவி வேண்டும் என்பதற்காக அவர்கள் சண்டிகையை வழிப்பட்டு கிரக பதவி அடைந்தார்கள் என்பது ஐதீகம். முறையே அவர்களுக்குரிய நாள், நேரம் ஆகியவற்றில் இந்தப் பூஜையைச் செய்தால் காரியசித்தியும் சண்டிகையின் பேரருளும் கிட்டும் என்ற வரத்தையும் அவ்விருவரும் சண்டிகையிடம் பெற்றார்கள் என்று தேவீ பாகவதம் கூறுகிறது. செவ்வாய் தோஷம், நாக தோஷம் உள்ளவர்கள் இந்த விரதத்தை கடைபிடித்து தோஷ நிவர்த்தி அடைந்து தேவியின் அருளைப் பெறலாம்.

 
 


புத்திர பாக்கியம் அருளும் துர்க்கை ஸ்லோகம்


புத்திர பாக்கியம் அருளும் துர்க்கை ஸ்லோகம்


"நமோ தேவ்யை மஹா தேவ்யை
துர்க்காயை ஸததம் நமஹ
புத்ரஸௌக்யம் தேஹி தேஹி
கர்ப்பரக்ஷாம் குருஷ்வ நஹ"


 durga mantra for pregnancy
இந்த மந்திரம் வம்சவிருத்திகர வம்ஸ கவசம் ஆகும். இம்மந்திரத்தை தினமும் காலை மற்றும் மாலை இரு வேலைகளிலும் சொல்லி தூய பக்தியுடன் துர்க்கையை வழிபட வேண்டும். வீட்டில் இருக்கும் துர்க்கை படத்தின் முன்பே வழிபடலாம். வாரம் ஒரு முறை அல்லது உங்களால் முடிந்த வரையில் துர்க்கை ஆலயம் சென்று விளக்கேற்றி வழிபடலாம்.
இம்மந்திரத்தின் பொருள், மகாதேவியான துர்க்கையே உனக்கு நமஸ்காரம். புத்திர பாக்கியத்தை எனக்கு அருள்வாய் அம்மா. எனக்கு கர்ப்பரட்சை புரிந்து காப்பாற்றுவாய் அன்னையே.
இத்துதியை குழந்தை வரம் வேண்டுவோர் மனமுருகி துதித்திட தாய் துர்க்காதேவியின் திருவருளால் சந்தான வரம் கிடைக்கும்.



கஷ்ட, நஷ்டங்களை போக்கும் அனுமன் மந்திரங்கள்


 

கஷ்ட, நஷ்டங்களை போக்கும் அனுமன் மந்திரங்கள்

‘ஓம் நமோ ஹனுமதே ருத்ர
அவதாராய பர யந்த்ர மந்த்ர
தந்த்ர த்ராதக நாசகாய
ஸ்ரீ ராம தூதாய ஸ்வாஹா’

‘புத்திர் பலம் யஸோ தைர்யம்
நிர்பயத்வமரோகதா அஜாத்யம்
வாக்படுத்வம் ச ஹநுமத் 
ஸ்மரணாத் பவேத்
 
 http://www.penmai.com/wp-content/uploads/2014/05/mantra-for-peace-of-mind.jpg

 
ஒருவருக்கு கண் திருஷ்டி அல்லது எதிர்மறை சக்திகளால் உண்டாகும் கஷ்ட நஷ்டங்களைக் களைய உண்டாகும் அனுமன் மீது அமைந்த இரண்டு முக்கியமான மந்திரங்களை தினமும் சொல்லலாம்.
இம்மந்திரத்தை ஒருவரது ஜன்ம நட்சத்திரத் தினத்தன்று காலையில் ஒரு அனுமனின் கோவிலில் ஏதாவது ஒன்றை மட்டும் சொல்லி அனுமனை வணங்கி ஆரம்பிக்க வேண்டும். அதன் பிறகு தினமும் காலையில் வீட்டிலிருந்தே சொல்லி அனுமனை வணங்கலாம். இந்த மந்திரங்களை எப்போதும் 48 அல்லது 108 தடவை சொல்லி வணங்குதல் முக்கிய அம்சமாகும்.
ஒருவரது ஜாதகத்தில் அவர்களின் லக்னம், லக்னாதிபதி, ராசி, ராசியாதிபதி, சூரியன், சந்திரன் ஆகியவை பாதிப்படைந்து அல்லது பலவீனமாக இருந்தால் அவருக்கு மற்றவர்களின் கண் திருஷ்டியால், எதிர்மறை சக்திகளால் கஷ்ட நஷ்டங்கள் ஏற்படும். குடும்பத்தில் சுமூகமான சூழ்நிலை இன்றி மனம் அமைதி இல்லாமல் அலைப்புறும். இதே போல் ஒருவரின் ஜாதகத்தில் 6,8,12 ஆகிய இடங்கள் பலமாக இருந்து, கோச்சார நிலைகள் பாதகமாக இருந்தாலும் அவற்றின் திசா புத்தி காலங்களில்மேற்கண்ட பிரச்சினைகள் உண்டாகும். அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு நல்ல பலனைத்தரும் இந்த அன்மன் மந்திரங்கள்.
http://www.penmai.com/vratham-poojas


 

ஸ்ரீ பத்மாவதி தாயார் மந்திரம்

சொத்து பணம் பற்றிய குடும்ப பிரச்சனைகளை களையும் ஸ்ரீ பத்மாவதி தாயார் மந்திரம்

"ஓம் நமோ பத்மாவதி
பத்ம நேத்ர வஜ்ர வஜ்
ராம் குஷ ப்ரத்யக்ஷம் பவதி’

 goddess padmavathi thayar mantra
குடும்பத்தில் சொத்து மற்றும் பணம் சம்மந்தமாக ஏற்படும் பிரச்சனைகளுக்கும் அமைதியின்மைக்கும், மேலும் குடும்ப உறுப்பினர்களிடையே சொத்து சம்மந்தமான தகராறு மற்றும் வாக்குவாதங்களுக்கும் கருத்து வேற்றுமைகளுக்கும் ஒரு நல்ல தீர்வாக அமையக் கூடிய ஒரு திருமந்திரம் ஸ்ரீ ஸ்ரீ பத்மாவதி தாயார் மந்திரம் ஆகும்.


இந்த மந்திரத்தை ஒரு வளர்பிறை திங்கள் அல்லது வெள்ளிக் கிழமை அன்று, இரவு 9 மணிக்குமேல் பத்மாவதி தாயாரின் திருவுருவப் படத்தின் முன்பு நெய் தீபமேற்றி 108 முறை சொல்லி தாயாரை வணங்க வேண்டும். அன்று முதல் தொடர்ச்சியாக 48 நாட்களுக்கு இரவில் இம்மந்திரத்தை சொல்லி தாயாரை வணங்க மேற்சொன்னபடி பணம் சொத்து சம்மந்தமாக குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகள் நீங்கி அமைதி நிலவும்.
இது ஸாத்வீக தேவதா மந்திரம் ஆதலால், பத்மாவதி தாயாருக்கு பூஜை செய்யும் இந்த 48 நாட்களில் அசைவ உணவு எடுத்துக் கொள்ளக் கூடாது. அதே போல், தினமும் மாலை குளித்து முடித்த பிறகே பூஜையில் அமர வேண்டும்.


 

நீண்ட ஆயுள் பெற ஸ்ரீ ருத்ரம்

மரணம் பயம் நீங்க, நீண்ட ஆயுள் பெற ஸ்ரீ ருத்ரம்
http://www.penmai.com/wp-content/uploads/2014/06/sri-rudhra-mantra-for-long-life.jpg 
நமஸ்தே அஸ்து பகவன் விச்வேஸ்வராய
மஹாதேவாய த்ரயம்பகாய – த்ரிபுராந்தகாய
த்ரிகாக்னி காலாய காலாக்னீ ருத்ராய நீலகண்டாய
ம்ருத்யுஞ்ஜாய ஸர்வேஸ்வராய ஸதா
சிவாய ஸ்ரீமன் மஹாதேவாய நம




ஒருவருக்கு ஏற்படும் மரண பயம் மற்றும் ஜாதகத்தில் உள்ள மரண கண்டங்கள் நீங்கி நீண்ட ஆயுள் பெற இந்த மந்திரம் உதவும். ஏதேனும் ஒரு திங்கட்கிழமை அல்லது பிரதோஷம் அல்லது மாத சிவராத்திரி அன்று சிவனை வணங்கி இந்த மந்திரத்தை சொல்லத் தொடங்க வேண்டும். அன்று முதல் தொடர்ந்து தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் இந்த மந்திரத்தை சொல்லி சிவனை வழிபட மரண பயம் நீங்கப் பெறலாம். நீண்ட ஆயுளும் பெறலாம்.
http://www.penmai.com/vratham-poojas-traditions/

சித்ரா பௌர்ணமி ஸ்லோகம் - சித்திரகுப்த ஸ்லோகம்

வாழ்க்கை பிரகாசமாக மாற பலன் தரும் சித்ரா பௌர்ணமி ஸ்லோகம்

chitra gupta mantra for chithra pournami 
ஓம் கமலவர்ணனே போற்றி
ஓம் சித்திரை உருவே போற்றி
ஓம் பயம் போக்குபவனே போற்றி
ஓம் கால உருவே போற்றி
ஓம் அந்தக நண்பனே போற்றி
ஓம் ஞான உருவே போற்றி
ஓம் கருணாகரனே போற்றி
ஓம் கணக்கனே போற்றி
ஓம் தர்மராஜனே போற்றி
ஓம் தேவலோக வாசனே போற்றி
ஓம் ஆயுள் காரணனே போற்றி
ஓம் மேன்மை தருபவனே போற்றி
ஓம் குழந்தை வடிவினனே போற்றி
ஓம் குளிகன் உருவினனே போற்றி
ஓம் புண்ணிய தோற்றமுடையாய் போற்றி
ஓம் சித்திரகுப்தனே போற்றி


Friday 19 December 2014

எதிர்மறை சக்திகள் விலக ஸ்ரீ பவானி அஷ்டகம்


 http://www.penmai.com/wp-content/uploads/2014/05/mantra-for-negative-energy-removal.jpg

ஸ்ரீ பவானி அஷ்டகம்

‘ந தாதோ ந மாதா ந பந்துர் ந தாதா
ந புத்ரோ ந புத்ரி ந ப்ர்த்யோ ந பர்த்தா
ந ஜாயா ந வித்யா ந வ்ருத்திர் மமைவ
கதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வமேகா பவானி


பவாப்தாவபாரே மஹா துக்க பீரு
பபாத ப்ரகாமி ப்ரலோபி ப்ரமத்த
கு சம்ஸார பாச ப்ரபத்த ஸதாஹம்
கதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வமேகா பவானி


ந ஜாநாமி தானம் ந ச த்யான யோகம்
ந ஜாநாமி தந்த்ரம் ந ச ஸ்தோத்ர மந்த்ரம்
ந ஜாநாமி பூஜாம் ந ச ந்யாஸ யோகம்
கதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வமேகா பவானி


ந ஜாநாமி புண்யம் ந ஜாநாமி தீர்த்தம்

ந ஜாநாமி முக்திம் லயம் வா கடாசித்
ந ஜாநாமி பக்திம் வ்ரதம் வாபி மாதர்
கதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வமேகா பவானி


கு கர்மி கு ஸங்கி கு புத்தி கு தாஸ
குலாச்சார ஹீன கடாச்சார லீன
கு த்ருஷ்டி கு வாக்ய ப்ரபந்த சதாஹம்
கதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வமேகா பவானி


ப்ரஜேஷம் ரமேஷம் மஹேஷம் ஸுரேஷம்
தினேஷம் நிசீ தேஸ்வரம் வா கடாசித்
ந ஜாநாமி சான்யத் ஸதாஹம்
சரண்யே கதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வமேகா பவானி


விவாதே விஸாதே ப்ரமாதே ப்ரவாஸே
ஜலே ச அனலே பர்வதே ஷத்ரு மத்யே
ஆரண்யே ஷரண்யே ஸதா மாம் ப்ரபாஹி
கதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வமேகா பவானி


அநந்தோ தரித்ரோ ஜரா ரோகா யுக்தோ
மஹா க்ஷீண தீன ஸதா ஜாத்ய வக்த்ர
விபத்து ப்ரவிஷ்ட்ட ப்ரநஷ்ட்ட ஸதாஹம்
கதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வமேகா பவானி


எங்கும் நிறையிறையருள் பொங்கிப் பரவிப் பழுதறு பவித்ர மங்களங்கள் யாவும் எங்கும் வளரட்டும்.



ஒருவரைப் பாதிக்கக் கூடிய சகல எதிர்மறைச் சக்திகளையும் அவர்களை விட்டு விலகியோடச் செய்யும் சக்தி படைத்த மந்திரம் ‘ஸ்ரீ பவானி அஷ்டகம்’ ஆகும். இது ஆதி சங்கர பகவத்பாதர் அருளியது.
இம்மந்திரத்தை ஒரு வெள்ளிக் கிழமை தினதிலோ அல்லது செவ்வாய்க் கிழமையிலோ ஆரம்பித்து காலை மற்றும் மாலை இரு வேளைகளிலும் நான்கு அல்லது ஆறு முறை பாராயணம் செய்து வந்தால் உங்களை சுற்றியுள்ள சகல எதிர்மறை சக்திகளும் விலகி விடும். இம்மந்திரத்தை உங்களுடைய பிரச்சினைகள் தீரும் வரை பாராயணம் செய்ய வேண்டும். விருப்பம் உள்ளவர்கள் அதற்கு பிறகும் தொடர்ந்து இதனைப் பின்பற்றலாம்.


ஆரோக்கியம் தரும் ஸ்லோகம்

ஆரோக்கியம் தரும் ஸ்லோகம்

http://www.penmai.com/wp-content/uploads/2014/05/mantra-for-good-health.jpg 
 
‘ஓம் தினகராய பாஸ்கராய ஜோதிஸ்வரூபாய
சூர்ய நாராயணாய தேவாய நமோ நம’

இந்த மந்திரத்தை ஒரு வளர்பிறை ஞாயிற்றுக்கிழமை காலையில் ஆரம்பித்து தினமும் 108 முறை சொல்லி இறைவனை வணங்க வேண்டும்.
உடல், மனம் மற்றும் ஆன்மா என்ற மூன்று நிலைகளிலும் பல நன்மைகளைப் பெற இந்த மந்திரம் உறுதுணையாக அமையும்.
மேலும் கண்களின் பார்வைத்திறனும், ஆயுள் ஆரோக்கிய விருத்தியும் நன்முறையில் அமையும்.



மன அமைதிக்கு வழிகாட்டும் மந்திரம்



 http://www.penmai.com/wp-content/uploads/2014/05/mantra-for-peace.jpg



                     ‘ஓம் சுமுகாய நமஹ’



இம்மந்திரம், நம் மனதின் சமநிலையையும், அமைதியையும் நிலைப்படுத்த உதவும் ஒரு இனிய மந்திரம் ஆகும்.
எப்போதெல்லாம் உங்களுடைய மனம் அமைதி நிலையை இழந்து தவிக்கிறதோ, அப்போதெல்லாம் இந்த மந்திரத்தை மனதார ஸ்ரீ விநாயகரின் திருவுருவத்தோடு நினைத்து துதித்தால் மனம் அமைதி நிலை பெற்று மகிழ்ச்சி உணர்வு உண்டாகும்.



சித்திரா பௌர்ணமி

சித்திரா பௌர்ணமி

சித்திரை மாதத்தில் பௌர்ணமி திதியும்; சித்திரை நட்சத்திரமும் கூடி வருவருவதால் சித்திரா பௌர்ணமி என அழைக்கப் பெறுகின்றது. மாதத்தின் பெயரும், நட்சத்திரத்தின் பெயரும் ஒன்றாகி (சந்திரன் சித்திரை மாதத்தில் சித்திரை நட்சத்திரத்தில் சஞ்சரிக்கையில்), சூரியன் உச்ச பலம் பெறும் மேஷ இராசியில் (சித்திரைமாதத்தில்) வரும் பௌர்ணமி தினம் சிறப்புப் பெறுகின்றது

 இத் திதியும், நட்சத்திரமும், மாதமும் அம்மனுக்குரியனவாக இருப்பதனால்; இத் தினம் அம்பாளை பூஜிக்க மிகவும் சிறப்புப் பொருந்திய நாளாக அமைகின்றது. அத்துடன் தாயாரை இழந்தவர்களுக்கு பிதுர் தர்ப்பணம் செய்யும் நாளாகவும், பிரம்மஹத்தி தோஷம் பிடித்தவர்கள் தோஷம் நீங்கும் விரதமாகவும் அமைகின்றது. சித்திரா பௌர்ணமி  இவ் வருடம் மே மாதம் 05-ம் தேதி (05.05.2012)  அமைவதாக சோதிடம் சொல்லுகின்றது.

இத் தினத்தில் ஆலயங்களிலே குறிப்பாக பணிப்புலம் முத்துமாரி அம்பாள் ஆலயம் உட்பட எல்லா அம்மன் ஆலயங்களில் பால்குடங்கள் எடுப்பது, திருவிளக்கு பூஜை, விஷேச அபிஷேக ஆராதனைகளும், வழிபாடும் சித்திரைக் கஞ்சி வார்ப்பும் இடம்பெறுகின்றது.  சில ஆலயங்களில் பொங்கல் விழாவும் சிறப்பாக நடைபெறுகின்றன. 

சிவாலயங்களிலும், பெருமாள் (விஷ்ணு) கோவில்களிலும் சிறப்பு அபிஷேகங்கள், இறை வழிபாடு, வீதி ஊர்வலங்கள் என்றும் சிறப்பாக நடைபெறுகின்றன. அம்மனுக்குச் சிறப்புப் பொருத்திய இச்சித்திரா பௌர்ணமி விரத நாளிலேயே எமனின் சபையில் நம் பாவ புண்ணியக்கணக்கை இம்மியும் பிசகாமல் எழுதும் சித்திரகுப்தன் அவதரித்த நாளாகவும் இது கருதப்படுவதால் சித்திர குப்தன் விரதமும் அமைகின்றது. ஒவ்வொருவரும்  செய்யும் புண்ணிய, பாவங்களைக் கணிப்பவர் சித்திர குப்தன் என்பது நம்பிக்கை. நாம் செய்யும் புண்ணிய, பாவங்களை நமது இறப்பின் பின் கணித்து அதற்கேற்ப மோட்சமோ, நரகமோ, மறு பிறவியில் பெறும் உருவமோ வழங்கப்படும் என்பது இந்துக்களின் ஐதீகம்.  சில கோவில்களில் சித்திரகுப்த பூஜையும் செய்யப்படுகிறது.

சித்திரா பௌர்ணமி

சித்திரா பௌர்ணமி

சித்திரை மாதத்தில் பௌர்ணமி திதியும்; சித்திரை நட்சத்திரமும் கூடி வருவருவதால் சித்திரா பௌர்ணமி என அழைக்கப் பெறுகின்றது. மாதத்தின் பெயரும், நட்சத்திரத்தின் பெயரும் ஒன்றாகி (சந்திரன் சித்திரை மாதத்தில் சித்திரை நட்சத்திரத்தில் சஞ்சரிக்கையில்), சூரியன் உச்ச பலம் பெறும் மேஷ இராசியில் (சித்திரைமாதத்தில்) வரும் பௌர்ணமி தினம் சிறப்புப் பெறுகின்றது

 இத் திதியும், நட்சத்திரமும், மாதமும் அம்மனுக்குரியனவாக இருப்பதனால்; இத் தினம் அம்பாளை பூஜிக்க மிகவும் சிறப்புப் பொருந்திய நாளாக அமைகின்றது. அத்துடன் தாயாரை இழந்தவர்களுக்கு பிதுர் தர்ப்பணம் செய்யும் நாளாகவும், பிரம்மஹத்தி தோஷம் பிடித்தவர்கள் தோஷம் நீங்கும் விரதமாகவும் அமைகின்றது. சித்திரா பௌர்ணமி  இவ் வருடம் மே மாதம் 05-ம் தேதி (05.05.2012)  அமைவதாக சோதிடம் சொல்லுகின்றது.

இத் தினத்தில் ஆலயங்களிலே குறிப்பாக பணிப்புலம் முத்துமாரி அம்பாள் ஆலயம் உட்பட எல்லா அம்மன் ஆலயங்களில் பால்குடங்கள் எடுப்பது, திருவிளக்கு பூஜை, விஷேச அபிஷேக ஆராதனைகளும், வழிபாடும் சித்திரைக் கஞ்சி வார்ப்பும் இடம்பெறுகின்றது.  சில ஆலயங்களில் பொங்கல் விழாவும் சிறப்பாக நடைபெறுகின்றன. 

சிவாலயங்களிலும், பெருமாள் (விஷ்ணு) கோவில்களிலும் சிறப்பு அபிஷேகங்கள், இறை வழிபாடு, வீதி ஊர்வலங்கள் என்றும் சிறப்பாக நடைபெறுகின்றன. அம்மனுக்குச் சிறப்புப் பொருத்திய இச்சித்திரா பௌர்ணமி விரத நாளிலேயே எமனின் சபையில் நம் பாவ புண்ணியக்கணக்கை இம்மியும் பிசகாமல் எழுதும் சித்திரகுப்தன் அவதரித்த நாளாகவும் இது கருதப்படுவதால் சித்திர குப்தன் விரதமும் அமைகின்றது. ஒவ்வொருவரும்  செய்யும் புண்ணிய, பாவங்களைக் கணிப்பவர் சித்திர குப்தன் என்பது நம்பிக்கை. நாம் செய்யும் புண்ணிய, பாவங்களை நமது இறப்பின் பின் கணித்து அதற்கேற்ப மோட்சமோ, நரகமோ, மறு பிறவியில் பெறும் உருவமோ வழங்கப்படும் என்பது இந்துக்களின் ஐதீகம்.  சில கோவில்களில் சித்திரகுப்த பூஜையும் செய்யப்படுகிறது.

அட்சய திருதியை அன்று என்ன செய்ய வேண்டும்

பவுர்ணமி அல்லது அமாவாசைக்குப் பிறகு வரும் மூன்றாவது திதி நாள் திருதியை.  சயம் என்றால் தேய்தல் என்று பொருள். அட்சயம் என்றால் தேயாது, குறையாது, வளர்தல் என்று பொருள்.   

சித்திரை மாத வளர்பிறையில் வரும் திருதியை நாளே அட்சய திருதியை எனப்படுகிறது. எல்லா நலன்களையும் குறைவிலாது அள்ளிக் கொடுக்கும் இந்தத் திருதியை நன்னாளை அட்சய திருதியை என அழைத்துப் போற்றிக் கொண்டாடுகின்றனர்.

அதனால் தான் மிக விலையுயர்ந்ததாகக் கருதப்படும் தங்கத்தை அன்று மக்கள் வாங்குகின்றனர். மகாகவி காளிதாசர் அருளிய உத்திர காலாமிருதம் என்னும் ஜோதிட நூல், திதி நாட்களில் மிகவும் விசேஷமானது திருதியை என்று கூறுகிறது. பௌர்ணமி திதி, அமாவாசை திதி, சதுர்த்தி திதி, ஏகாதசி திதி, அஷ்டமி திதி போன்ற திதிகளைப் போன்றே அமாவாசைக்குப் பிறகு வரும் திருதியை திதியும் சிறப்பு திதியாகத் திகழ்கிறது. அமாவாசைக்குப் பிறகு வரும் மூன்றாவது திதி நாளான திருதியைத் திருநாள் திருமகளுக்குரிய நாளாகத் திகழ்கிறது. அதிலும் தமிழ் மாதத்தில் , சித்திரை மாத அமாவாசைக்குப் பிறகு வரும் 3-வது பிறையான அட்சயத் திருநாள் மிகவும் மகிமைமிக்கது என சாஸ்திரங்கள் கூறுகின்றன. 

அட்சய திருதியையால் அமைந்த நிகழ்வுகள்: முற்காலத்தில் வைசியன் ஒருவன் மிகவும் ஏழ்மையான நிலையில் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தான். அன்றாட உணவுக்கே வழியில்லை. ஆயினும், அவன் மிகவும் பக்தியுடன் வாழ்ந்து வந்தான். அவன் பக்தியைக் கண்ட பெரியோர், அவனிடம் அட்சய திருதியை வழிபாடு பற்றிக் கூறினார்கள். அவன் ஓர் அட்சய திருதியை நன்னாளில் அதிகாலை எழுந்து நீராடி, பாத்திரத்தில் அன்னம் வைத்து தண்ணீர், கோதுமை, சத்துமாவு, கரும்புச்சாறு, பால், தட்சிணை முதலானவற்றை ஏழை அந்தணர்களுக்குத் தானம் கொடுத்தான். அன்றைய வழிபாடுகளையும் முறைப்படி அனுசரித்தான். வறுமையின் காரணமாக அவனது மனைவி அவனைத் தடுத்தும்கூட, குறைவில்லாது அட்சய திருதியை நன்னாளை அனுசரித்தான் வைசியன். இதன் பயனாக அவன் தனது மறுபிறவியில் குஷபதி சக்ரவர்த்தியாகப் பிறந்து புகழ் பெற்றான் என புராணங்கள் பேசுகின்றன.

யுகங்களுள் இரண்டாவது யுகமான திரேதாயுகம், ஓர் அட்சய திருதியை திருநாளில்தான் ஆரம்பாமாயிற்றாம். தன் குருகுல நண்பனான ஏழைக் குசேலன் தன்னைப் பார்க்க வந்தபோது அவன் கொடுத்த மூன்று பிடி அவலைத் தின்று, பதிலாக கோடி கோடி செல்வங்களைக் கொட்டிக் கொடுத்து குசேலனை கிருஷ்ண பரமாத்மா குபேரனாக்கிய திருநாளும் இந்த அட்சய திருதியை நன்னாளில்தான்! பரசுராமர் அவதரித்த நன்னாள், பலராமர் தோன்றிய பொன்னாள் அட்சய திருதியையே!

துரியோதனனின் சூழ்ச்சியினால், பஞ்ச பாண்டவர்கள் வனவாசத்தை மேற்கொள்ளக்கூடிய நிலை ஏற்பட்ட போது, ஆகாரத்துக்கு அவர்கள் கஷ்டப்படாமல் இருக்க அவர்களின் முக்கிய ஆலோசகரான கண்ணன், திரௌபதியிடம் இருந்து அந்த அட்சய பாத்திரத்தை வாங்கி அவர்களிடம் கொடுத்தார். அவர்களுக்குத் தேவையானபோது அந்த அட்சய பாத்திரத்தின் மூலம் அள்ள அள்ளக் குறையாத அன்னங்களை, அவர்கள் விருப்பப்பட்ட உணவுப்பொருட்களைப் பெற்று சந்தோஷமாகப் புசித்து வந்தார்கள். இதை நினைவுபடுத்தும் வகையிலும் இந்த அட்சய திருதியை கொண்டாடப்படுகிறது. 

இந்த அட்சய திரிதியை நாளில்தான் பிட்சாடனரான சிவபெருமான் தன் கபால (பிரம்ம கபாலம்) பிட்சை பாத்திரத்தில் நிரம்பும் அளவு உணவை காசியில் அன்னபூரணியிடமிருந்து பெற்றுக் கொண்டார். 
கௌரவர்கள் சபையில் துச்சாதனன் பாஞ்சாலியின் உடையை உருவி மானபங்கப்படுத்தினான். அப்போது கண்ணபிரான் அட்சய என்று கூறி கைகாட்டி அருள, துச்சாதனன் உருவ உருவ புடவை வளர்ந்து கொண்டே இருந்த நாள் இந்த அட்சய திரிதியை நாளில்தான். இதனால் தான் பாஞ்சாலி மானம் காப்பாற்றப்பட்டது. 

அட்சய திருதியையில், எதைச் செய்தாலும் வளர்ந்துகொண்டே இருக்கும். அன்று கொடுக்கும் தானம், அளவற்ற புண்ணியத்தைக் கொடுக்கும். அன்று பித்ருக்களுக்கு பிதுர்பூஜை என்று சொல்லக்கூடிய தர்ப்பணங்களைச் செய்து அவர்களின் ஆசியைப் பெற்றால், குடும்பமும் வாரிசுகளும் வளர்ச்சியடைவார்கள்.
 அட்சயதிருதியால் ஏற்படும் பலன்கள்:
 இந்த நாளில் ஏழை, எளியவர்களுக்கு அன்னதானம் செய்வது, நல்ல காரியங்களுக்கு உதவுவது, எந்த வகையிலாவது பிறருக்கு உறுதுணையாக இருப்பது இவற்றினாலும் தர்மதேவதையின் அருளைப் பெற்று, இந்த அட்சய திருதியையில் புண்ணியங்களைச் சேர்த்துக் கொள்ளலாம். திருமகள் அம்சமாக நல்ல மனைவி அமைய விரும்புவோர், தங்களுக்கு நல்ல மருமகள் வர விரும்பும் பெற்றோர், அட்சய திருதியையில், திருக்கோயிலில் வைத்து பெண் பார்க்கும் வைபவத்தையோ நிச்சயதார்த்தத்தையோ நடத்தினால் விரும்பியபடி மணமகள் அமைவாள்.

அட்சய திருதியை அன்று என்ன செய்ய வேண்டும்:

இந்நாளில் வாங்கப்படும் எந்தப் பொருளும் இல்லத்தில் குறைவின்றி நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கை. எனவேதான் இந்நாளில் தங்கம் வாங்க விரும்புகின்றனர். ஆனால் இவ்வளவு விலை உயர்ந்த பொருளை அனைவராலும் வாங்க இயலாது. அதற்காக மனம் தளர வேண்டாம். நமக்கு மிகவும் உபயோகமான பொருட்களை வாங்கிப் பயனடையலாமே. அன்று உப்பு, அரிசி மற்றும் தேவையான ஓரிரு ஆடைகள், ஏதாவது ஒரு சிறு பாத்திரம் என வாங்கலாம். எப்படியும் நாம் மாதாமாதம் மளிகைப் பொருட்கள் வாங்கி ஆக வேண்டும். அதனை இம்மாதத்தில் மட்டும் இந்த அட்சயதிரிதியை நாளில் வாங்கி வளம் பெறலாமே. 

வட இந்தியாவில் இந்நாளை அகஜித் என்பர். ஸ்ரீமகாலட்சுமி விஷ்ணுவின் மார்பில் இந்நாளில்தான் இடம் பெற்றாள்; நிரந்தரமாகத் தங்கினாள். அஷ்ட லட்சுமிகளில் ஐஸ்வரிய லட்சுமியும், தான்ய லட்சுமியும் தோன்றிய நாளும் இதுதான். 

ஸ்ரீலட்சுமியானவள் வைகுண்டத்தில் மகாலட்சுமியாகவும், பாற்கடலில் ஸ்ரீலட்சுமியாகவும், இந்திரனிடம் சுவர்க்க லட்சுமியாகவும், அரசர்களிடம் ராஜ லட்சுமியாகவும், வீரர்களிடம் தைரிய லட்சுமியாகவும், குடும்பத்தில் கிரக லட்சுமியாகவும், பசுக்களில் கோமாதாவாகவும், யாகங்களில் தட்சிணையாகவும், தாமரையில் கமலையாகவும், அவிர்பாகம் அளிக்கும்போது ஸ்வாகா தேவியாகவும் விளங்குகிறாள். இப்படி சகல யோகங்களுக்கும் ஆதாரமாக விளங்குபவள் லட்சுமிதான். எனவே, அட்சய திரிதியை அன்று ஸ்ரீமன் நாராயணனின் இணைபிரியாத தேவி ஸ்ரீலட்சுமியைப் பூஜிக்க வேண்டும். 

நம் இல்லத்தில் சாஸ்திரப்படி பூஜை செய்பவர்களுக்கு திருவருளும் லட்சுமி கடாட்சமும் கிட்டும். அன்று செய்யும் தானதர்மத்தால் மரண பயம் நீங்கி உடல் நலம் உண்டாகும். அன்னதானத்தால் விபத்து விலகும். ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவினால் நம் குடும்ப குழந்தைகளின் கல்வி மேம்படும்.  தானதர்மங்கள் செய்தால் எம வேதனை கிடையாது. நலிந்தவர்களுக்கு உதவி செய்தால் மறுபிறவியில் ராஜயோக வாழ்க்கை அமையும். ஆடைகள் தானம் செய்தால் நோய்கள் நீங்கும்; பழங்கள் தானம் செய்தால் உயர் பதவிகள் கிடைக்கும். மோர், பானகம் அளித்தால் கல்வி நன்கு வளரும்; தானியங்கள் தானம் கொடுத்தால் அகால மரணம் ஏற்படாது. தயிர் சாதம் தானம் அளித்தால் பாவ விமோசனம் ஏற்படும். முன்னோருக்கு தர்ப்பணம் செய்தால் வறுமை நீங்கும்.  அட்சய திருதியை அன்று ஆலிலையில் மிருத்யுஞ்ஜய மந்திரத்தை ஜபித்து, அதை நோயாளிகளின் தலையணையின் அடியில் வைத்தால் நோய் விரைவில் குணமாகும் என்பது நம்பிக்கை.

அட்சய திருதியும் அதன் வழிபாட்டு அமைப்பும்: அட்சய திருதியை நாளில், பூஜையறையில் குலதெய்வ - இஷ்ட தெய்வங்களை வணங்கி வழிபடும் போது, பூஜையில் தொழில் ஆவணங்கள், பணம் இவற்றையெல்லாம் வைத்து அவர்களுக்குரிய மந்திரங்களையும் உச்சரித்து, வலம்புரிச் சங்கில் தீர்த்தம், பால் போன்றவை வைத்து சாமிக்கு நிவேதனம் செய்ய வேண்டும். மேலும் இத்துடன் அருகம்புல், வில்வம், துளசி, மரிக்கொழுந்து, மல்லிகை, செந்தாமரை மலர்களாலும் வீட்டிலும் வியாபார ஸ்தலங்களிலும் வழிபட்டால், தொழில்  முன்னேற்றமும் குடும்ப விருத்தியும் ஏற்படும்.

சனி பகவானின் தண்டனையில் இருந்து தப்பிக்க – ஒரு சிறந்த பரிகாரம்




ஏழுதலைமுறைக்கு முன் செய்த பாவங்களும்,இந்த தலைமுறையில் நீங்கள் செய்த பாவங்கள் அனைத்தும் தீருவதற்கு ஒரு மிகச் சிறந்த பரிகாரம்.
எவர் ஒருவர் செய்த பாவங்களும், அவருக்கு பூமெராங் ஆகி திரும்ப கிடைப்பது – அவருக்கு ஜாதகப்படி மோசமான தசா, புக்தி நடக்கும் காலங்களில். அல்லது அஷ்டமச் சனி, ஜென்ம சனி நடக்கும் காலங்களில் – சனி பகவான் , தயவு , தாட்சண்யமின்றி – கொடுமையாக தண்டிக்கிறார்.
கீழே கொடுக்கப் பட்டிருக்கிற விஷயம் – யாரும் சனியோட கடுமையால பாதிக்க படக்கூடாதுங் கிறதுக்காக ஒரு சித்தர் பரிந்துரைக்கும் மிக எளிய பரிகாரம்.
சனிக்கிழமையன்று பச்சரிசியை ஒரு கையில் அள்ளி அரிசியாக அல்லது அதை நன்கு பொடி செய்து சூரியநமஸ்காரம் செய்துவிட்டு,விநாயகப்பெருமானை மூன்று சுற்று சுற்றிவிட்டு அந்த அரிசியை விநாயகரைச்சுற்றிப்போட்டால்,அதை எறும்பு தூக்கிச் செல்லும்.அப்படித்தூக்கிச் சென்றாலே நமது பாவங்களில் பெரும்பாலானவை நம்மைவிட்டுப் போய்விடும்.
வன்னி மரத்தடி விநாயகராக இருந்தால் , அது இன்னும் விசேஷம். சனிக்கிழமைகளில் இதை செய்யவும்.
அப்படித்தூக்கிச்சென்ற பச்சரிசி மாவை எறும்புகள் தமது மழைக்காலத்திற்காக சேமித்து வைத்துக்கொள்ளும்.எறும்பின் எச்சில் அரிசிமாவின் மீது பட்டதும் அதன் கெடும்தன்மை நீங்கிவிடும்.இந்த பச்சரிசிமாவை சாப்பிடுவதற்கு இரண்டரை வருடங்கள் எடுத்துக்கொள்ளும்.இப்படி இரண்டேகால் வருடங்கள் வரை எறும்புக்கூட்டில் இருப்பதை முப்பத்துமுக்கோடி தேவர்கள் கவனித்துக்கொண்டிருப்பார்கள்.இரண்டரை ஆண்டிற்கு ஒருமுறை கிரகநிலை மாறும்.அப்படி மாறியதும்
அதன் வலு இழந்துபோய்விடும்.இதனால்,நாம் அடிக்கடி பச்சரிசி மாவினை எறும்புக்கு உணவாகப்போடவேண்டும்.
ஓர் எறும்பு சாப்பிட்டால் 108 பிராமணர்கள் சாப்பிட்டதற்குச் சமம். எனவே இது எத்தனை புண்ணியம் வாய்ந்த செயல் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
இதனால்,சனிபகவானின் தொல்லைகள் நம்மைத் தாக்காது. ஏழரைச்சனி,அஷ்டமச்சனி,கண்டச்சனி,அர்த்தாஷ்டகச்சனி – சனி மகா தசை நடப்பவர்களுக்கு , இந்த செயல் ஒரு மிக பெரிய வரப்ரசாதம் ஆகும்.
உடல், ஊனமுற்றவர்களுக்கு – காலணிகள், அன்ன தானம் – அளிப்பது , மிக நல்லது.
உங்களால் முடிந்த அளவுக்கு , உங்கள் நண்பர்களுக்கும் இதை தெரியப் படுத்துங்கள்.

Kubera Money Mantra (God of Wealth)

Thursday 18 December 2014

தீபம் ஏற்றும் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

"துன்பம் அகற்றும் மலை
தொல்வினையை நீக்குமலை,
அன்பர்தமை வாவென்று அழைக்கும்மலை
தன்பகத்தைக் காட்டுமலை
தன்னைக் கருத்தில் உறும் அன்பர்
இடர் வாட்டுமலை அண்ணாமலை.''

பொருள்:

நம் துன்பங்களைப் போக்குவதும், முற் பிறவியில் செய்த தீவினைகளை களைவதும், அன் பர்களை தன்னிடத்தே வா என்று அழைப்பதும். தன்னை நாடி வந்தவர்களுக்கு திருவடிகளைக் காட்டுவதும், தன்னை எப்போதும் மனதில் இருத்தி தியானிப்பவர்களின் இடர்களை வாட்டுவதுமாகிய மலை திருவண்ணாமலையே.

விளக்கம்: இந்தப்பாடலை தீபமேற்றும் போது பாடினால் பிறப்பற்ற நிலை ஏற்படும் என்பது நம்பிக்கை. 
 
http://www.maalaimalar.com/2014/12/19104238/deepam-saying-slokas.html

சரஸ்வதியின் தமிழ் சுலோகம்


சரஸ்வதியின் தமிழ் சுலோகம்








ஊழ்வினை போக்குபவளே போற்றி
ஓம் ஊமைக்கும் அருள்பவளே போற்றி
ஓம் ஊரார் மெச்ச வைப்பவளே போற்றி
ஓம் ஊரும், பேரும் தருபவளே போற்றி
ஓம் ஊழியின் சக்தியே போற்றி
ஓம் ஊனக்கண் நீக்கி, ஞானக்கண் அருள்பவளே போற்றி

Homemade Face Packs to Remove Sun Tan(Sugar and lemon pack)





Homemade Face Packs to Remove Sun Tan

Did you know that there are many Natural home remedies that you can make at home to get rid of Sun tanning?? Try out Such natural remedies which were kept out of sight in grandma’s beauty Container & get the glow back in your skin. Here are some face packs that you can make easily at home to remove 

Cucumber juice and Rose water Pack:
  • Make a Mixture of rose water, cucumber juice and a dash of lemon juice. Apply this Solution on your face once in a day.
  • You could also use lemons for skin problems like acne, blackheads, etc.
 Sugar and lemon pack:

http://www.penmai.com/wp-content/uploads/2014/11/Homemade-Face-Mask-for-sun-tan.jpg

  • Apply the mixture of sugar and lemon juice on your face and wash it after 20 minutes. 

Note - If you have dry skin, then add a few drops of glycerine to the mixture.
Yeah Thats All! Do Try & Lemme Know.Take Care

 Honey and lemon juice pack:
  • Mix two tablespoons of honey with a few drops of lemon juice.
  • Apply it on the affected area once and wash it off with cold water.
Homemade face Packs to Remove Sun Tan turmeric
Turmeric pack:
  • Make a paste of a pinch of turmeric, lemon juice and raw milk.
  • Apply the Paste gently on the face and let it dry. Wash it off with cold water.
  • It gives you a flawless skin. 
Oats and buttermilk pack:
  • For this pack, Mix a tablespoon of oats with buttermilk and apply it on your face.
  • Oats also help in exfoliating the skin so this paste is extremely helpful.  
Curd and lemon pack:
 http://www.penmai.com/wp-content/uploads/2014/11/Homemade-face-Packs-to-Remove-Sun-Tan1.jpg

Homemade face Packs to Remove Sun Tan milk powder and honey

  • Make a mixture of gram flour, lime juice and curd to get rid of tanning.
  • Curd can also get rid of other skin problems too.
 Lemon juice pack for body parts:
  • To Lighten your knees, elbows and other patchy areas, apply fresh lemon juice over the areas.
  • And Leave it on for at least 20 minutes and wash it off. 
Coconut water pack:
  • Fresh coconut water gives the skin soft and Smooth.
  • Apply it on hands and face twice in a day can prove Extremely beneficial.
Milk powder and honey pack:
  • Make a paste of milk powder, lemon juice, almond oil and honey.
  • Apply it on the affected areas for at least 20 minutes.
  • It will help in reducing tan. When your time Permits, use it thrice a day for desired results.
 http://www.penmai.com/beauty/homemade-face-packs-to-remove-sun-tan
 

Dreams & its effects - கனவுகளும் பலன்களும்

இரவில் முதல் ஜாமத்தில் கண்ட கனவு ஒரு வருஷத்திலும், 2ஆம் ஜாமத்தில் கண்ட கனவு 3 மாதத்திலும், 3ம் ஜாமத்தில் கண்ட கனவு 1 மாதத்திலும் அருணோதயத்தில் கண்ட கனவு 10 தினங்களிலும் பலிதமாகும். நல்ல கனவு கண்டால் மறுபடியும் நித்திரை செய்யலாகாது. கெட்ட கனவு கண்டால் கடவுளை தியானித்து பிறகு நித்திரை செய்ய வேண்டும்.

சுப சொப்பனங்கள் பசு, எருது, யானை தேவாலயங்கள, அரண்மனை, மலைஉச்சி, விருக்ஷம் இவைகளின் மேல் ஏறுதல், மாமிச பக்ஷணம், தயிரன்னம் புசித்தல் வெள்ளை வஸ்த்திரம் தரித்தல்? ரத்தின ஆபரணங்கள் காணல், சந்தனம் பூசிக்கொள்ளல், வெற்றிலை பாக்கு தரித்தல், கற்பூரம், அகில், வெள்ளை புஷ்பம் இவைகளை கண்டால் சொற்ப சம்பத்து உண்டாகும். வெண்ணிறப் பாம்பு கடித்தல் தேள் கடித்தல் சமுத்திரம் தாண்டல், நெருப்பில் அகப்படுதல், கட்டுப்படல் இவைகளை கண்டால் தனலாபம் உண்டு

குழந்தையைக் கனவில் காண்பது நல்லது. தொழில் விருத்தி ஏற்படும். பொருள் வரவு அதிகமாகும்.

ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் விளையாடுவது போலவோ, சிரித்து மகிழ்வது போலவோ கனவு கண்டால் சந்தோஷமும் மகிழ்ச்சியும் நிலைக்கும்.

சூரியனைக் கண்டால் வியாதிகள் நீங்கும். விரோதிகளை வெல்லும் ஆற்றல் கிட்டும்.

கோயிலைக் கண்டால் நூதனமான தொழில் விருத்தியாகும். செல்வம் குவியப்போவதைக் குறிக்கும்.

வெல்லத்தைச் சாப்பிடுவதாக கனவு கண்டால் வறுமை நீங்கும்.

பலருடன் சேர்ந்து சாப்பிடுவதாக கனவு கண்டால் பொருள் லாபம் உண்டாகும்.

பழங்களை ஒருவர் தனக்கு கொடுப்பதாகவோ, உண்பதாகவோ கனவு கண்டால் செய்யும் காரியம் வெற்றியாகும் குருவிகளைக் கனவில் காண்பது நன்மையானது. கஷ்டமான நிலை விலகும். வம்புவழக்கு இருப்பின் வெற்றி கிட்டும்; நோயுற்றிருப்பின் நோய் அகலும். குருவி தன் வீட்டில் கூடு கட்டுவதாகக் கண்டால் திருமணமாகாதவருக்கு திருமணமும் திருமணமாகியிருந்தால் புத்திர பாக்கியமும் உண்டாகும்.

குருவிகள் கூட்டைப் பார்த்தால்கூட, இந்தப் பலன் உண்டு. ஆனால் குருவிக் கூட்டைத் தானே பிரிப்பதாய் கண்டால் துயரமிகுந்த சம்பவம் நடக்க இருக்கிறது என்பதை அறியலாம்.

குருவிகள் தன் குஞ்சுகளுக்கு இரையூட்டுவது போலவும் தன் குடும்பத்துடன் இருப்பதையும் கண்டால் வாழ்க்கையில் சந்தோஷம் ஏற்படும். குருவிகள் குதூகலமாய் இருப்பதைக் காண்பதும் நல்லதே. ஆனால் குருவிகள் சண்டை போடுவதைப் போல கண்டால் குடும்பத்தில் பிளவுகள் ஏற்பட்டு பிரிய நேரும். தொழிலும் பகை ஏற்பட்டு ஜீவனக் கேடு உண்டாகும்.

குருவிகள் இறந்து கிடப்பதைக் கண்டால்கூட கெடுபலன். பல தொல்லைகள் உண்டாகும். அடுப்பு சுவாலையுடன் எரிந்து கொண்டிருப்பதாகக் கண்டால் தொழிலில் விருத்தி ஏற்படும். புதிதாக தொழில் தொடங்கி இலாபம் பெற நேரும்.

அடுப்பு எரியாமல் அதனுள் பூனையோ அதன் குட்டிகளோ இருப்பதாகக் காண நேரின் ஆரோக்கியக் கேடும், செய்தொழிலில் நஷ்¢டமும் உண்டாகும். எரியும் அடுப்பு அணைத்து அதன் கரியையோ சாம்பலையோ காணநேரின் எதிர்பாராத நஷ்டம் ஏற்பட்டு அதனால் துன்புறப் போவதை உணர்த்தும். அழுக்கு ஆடை அணிந்திருப்பதாகக் கண்டால் பலவித சங்கடங்கள் நேர இருக்கின்றன என அறியலாம்.

வெண்பட்டு ஆடை உடுத்தியிருப்பதாகக் காண நேரின் பெண்களின் சேர்க்கையும் அதனால், இலாபமும் நேரும் தன்னை யாரோ ஏமாற்றிவிட்டதாகக் கண்டால் வஞ்சகத்தால் தன்னிடமுள்ள பொருள் பறிபோகப் போகிறது என்பதை அறியலாம்.

ஒரு நூதமான இயந்திரத்தைக் கண்டால், தான் மேற்கொள்ளப் போகும் செயலால் வெற்றியும் இலாபமும் ஏற்படும்.

அந்த இயந்திரத்தைத் தானே இயக்குவதாய்க் காண நேரின், செய்யப்போகும் தொழிலில் நிச்சயம் அபிவிருத்தியும் இலாபமும் மிகும். அந்த இயந்திரம் இயங்கிக் கொண்டிருப்பதாகக் கண்டால் தான் நினைக்கும் காரியத்தைச் செய்வதால் நன்மை பெறலாம்.

ஆனால இயந்திரம் ஓடிக்கொண்டே இருந்து நின்று போவதாகக் கண்டால், செய்யும் தொழில்கூட பாழ்படப் போகிறது என்பதை அறியலாம்.

ஆண் பெண் கலந்த கூட்டத்தைக் கண்டால் செய்தொழிலில் விருத்தி உண்டாகும¢.

நீர்க்குமிழியைக் கண்டால் சிறு சிறு நஷ்டங்கள் ஏற்படும். பிறர் தன் மீது வீண்பழி சுமத்துவர். எலுமிச்ச மரத்தைக் காண்பது நல்லது. அதில் பழங்கள் மிகுந்து தொங்குவதாகக் காணப்பட்டால் உடனடியாக எதிர்பாராத பணவரவு ஏற்படும்.

அதுவே பழமாக இல்லாது காயாக இருப்பின் பண வரவு ஏற்படும். ஆனால் மிகவும் தாமதமாய்க் கிடைக்கக்கூடும்.

எலுமிச்ச மரம் உலர்ந்து போய் விட்டதாகக் கண்டால் பலவித கஷ்ட நஷ்டங்களுக்கு ஆளாக நேரும். தெளிந்த நீரைக்காணின் வாழ்க்கையில் கஷ்டங்கள் நீங்கப் போவதையும், நல்ல காலம் தொடங்குகிறது என்பதையும் அறியலாம் பேனா அல்லது எழுதுகோல் எதையேனும் கண்டால் கடிதம் மூலமாக பொருள் வரவு ஏற்படும்.

அரண்மனையைக் கண்டால் பொருள் விருத்தியாகும்.

அரண்மனைக்குள் தாமே செவதாய்க் கான நேரின், உற்றார் உறவினர்களால் சந்தோஷம் மிகுதியாகும். செல்வ நிலையும் உயரும்.

வயதில் மூத்தவர்கள் தன்னை ஆசீர்வாதம் செய்வது போன்று கனவு கண்டால் ஜீவன மேன்மையும் பொருள் சேர்க்கையும் ஏற்படும்.

எலுமிச்சம்பழத்தைக் காண்பது நல்லது. தனக்கு ஒருவர் கொடுப்பதாகக் கண்டால் தொழிலில் விருத்தி, சகல பாக்கியங்களும் பெருகும்.

அப்பழத்தைச் சாப்பிடுவதாகக் கண்டால் நல்ல தன்று. குடும்பத்தில் ஏதோ ஓர் அசம்பாவிதம் நேரப் போவதைக் குறிக்கும். காய்ச்சல், நோய் ஏற்படும்.

காதுகளைக் கண்டால் குடும்பத்தில் கலகம் ஏற்பட்டு அதனால் கஷ்டம் நேரும்.

தனக்கு காதுநோய் வந்துவிட்டதாகக் கண்டால் கூட குடும்பத்தில் ஏற்படப் போகும் கலகத்தின் அறிகுறியே ஆகும்.

சாவிக் கொத்து தன்னிடம் இருப்பதாகக் கண்டால் குடும்பத்தில் பற்று அதிகமாகும். தொழிலில் மேன்மை, பொருள் சேர்க்கை மிகும்.

சாவிக் கொத்து காணாமல் போனதாகக் கண்டால் பலவித கஷ்ட நஷ்டங்களுக்கு ஆளாக நேரும். நம்பிக்கை மோசம் போவார்.

ஒரு கதவையோ பூட்டையோ திறப்பதாகக் கண்டால் பிறருக்கு உதவுவதன் மூலமாகப் புகழ் பெறுவர் உண்மை.

Wednesday 17 December 2014

தீய சக்திகள் விலக சரபேஸ்வரர் மந்திரம்

ஹராய பீமாய ஹரிப்ரியாய
பவாய சாந்தாய பராத்பராய
ம்ருடாய ருத்ராய த்ரிலோசனாய
நமோஸ்து துப்யம்
சரபேச்வராய ஸ்ரீ சரபாஷ்டகம்

பொதுப் பொருள்:

துக்கங்களைப் போக்குகிற சரபேஸ்வரரே நமஸ்கரம். பாவிகளுக்கு பயங்கரமாய் தோற்றமளிப்பவரே, விஷ்ணுவிடத்தில் அன்பு கொண்டவரே, மங்கள உருக்கொண்டவரே, சாந்த மூர்த்தியே, உலகத்துக்கெல்லாம் மேம்பட்டவரே, சுகம் அருள்பவரே, மூன்று கண்களை உடையவரே, சரபமூர்த்தியே, நமஸ்காரம்.

- இத்துதியை ஞாயிற்றுக்கிழமை, ராகு காலத்தில் பாராயணம் செய்தால் துக்கங்கள் நீங்கும்; தீய சக்திகளிடமிருந்து பாதுகாப்பு கிட்டும்.

http://www.maalaimalar.com/2014/11/15100450/The-forces-of--step-carapesvar.html

அனுமனை பற்றிய ஸ்லோகம்

அனுமன் இருப்பது, 60 அடி உயர சிலையிலோ, அல்லது அற்புதமாகக் கட்டப்பட்ட கோயிலிலோ மட்டுமல்ல; ஸ்ரீராம நாமம் ஒலிக்கும் இடமெல்லாம் அனுமன் இருக்கிறார்.

யத்ர யத்ர ரகுநாத கீர்த்தனம்
தத்ர தத்ர க்ருதமஸ்த
காஞ்சலிம் பாஷ்பவாரி பரிபூரண
லோசனம் மாருதிம் நமத ராக்ஷஸாந்தகம்

 என்று அனுமனைப் பற்றிய சுலோகம் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொருள்...எங்கெல்லாம் ஸ்ரீராம நாமம் ஒலிக்கிறதோ, அங்கெல்லாம் பக்திப் பரவசத்துடன் கண்களில் நீர் மல்கக் காட்சி தந்துகொண்டிருப்பவர் எவரோ, அவரே அனுமன் என்று தெரிந்துகொள் என்பது இதன் பொருள்.

http://www.maalaimalar.com/2014/12/04140126/hanuman-slokas.html

குழந்தைப் பேறு கிடைக்கச்செய்யும் அபிராமி ஸ்லோகம்

தாமம் கடம்பு படைபஞ்ச பாணம் தனுக்கரும்பு
யாமம் வயிரவர் ஏத்தும் பொழுது எமக்கென்று வைத்த
சேமம்திருவடி செங்கைகள் நான்கு ஒளி செம்மையம்மை
நாமம் திரிபுரை ஒன்றோ டிரண்டு நயனங்களே

பொருள் :

திருபுரை என்னும் பெயரும் கொண்டவள் அபிராமி. அன்னையின் நெற்றிக் கண்ணும் பிற இரண்டு கால்களும் நான்கு கைகளும் செந்நிறங் கொண்டன. மாலையோ கடம்ப மாலை. படையோ பஞ்ச பாணங்கள்.

வில், கரும்பு, தேவியை வணங்கும் நேரமோ பைரவர்க்குரியதான நள்ளிரவு. அந்த அன்னை எனக்கென வைத்த செல்வமோ தாமரைத் திருவடிகள்.

http://www.maalaimalar.com/2014/12/09105108/blessed-with-child-abirami-man.html

சகலமும் தரும் சனி ஸ்லோகம்



சங்கடம் தீர்க்கும் சனி பகவானே
மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய்
சச்சரவின்றிச் சாக நெறியில்
இச்சகம் வாழ இன்னருள் தா தா சனீஸ்வரன்

 http://www.maalaimalar.com/2014/12/16091243/sani-slokas.html

அஷ்ட ஐஸ்வர்யங்களை அடைய உதவும் மாதங்கி மந்திரம்

ஓம் மாதங்க்யை வித்மஹே
உச்சிஷ்ட சாண்டால்யை தீமஹி
தன்னோ தேவி ப்ரசோதயாத்

- இந்த மந்திரத்தை தினமும் காலையில் சொல்லி வந்தால் படிப்படியாக கஷ்டம் நீங்கி வளமை உண்டாகும்.

http://www.maalaimalar.com/2014/12/01142145/matangi-devi-mantra.html

Thursday 16 October 2014

குபேரர் இரகசியம்




குபேரர் இரகசியம்

1.       சுத்தம் (வீடு, அலுவலகம் எப்பொழுதும் சுத்தமாக இருக்க வேண்டும்)
2.       ஊக்கம், சுறுசுறுப்பு (எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும்)
3.       வந்த பணத்தை மதிக்க வேண்டும். வராததைப் பற்றி கோபப்படக் கூடாது.
4.       பண வறட்சி இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். (சேமிப்பு எப்பொழுதும் இருக்க வேண்டும், குறைந்த பட்சம் 500 ரூபாயாவது எப்பொழுதும் இருக்க வேண்டும். அப்படியே எடுத்தாலும் உடனடியாக உயிர் போகின்ற அவசரத்தில் அதை மீண்டும் சேர்க்க வேண்டும் (கடன் வாங்கி அல்ல, உழைத்து).
5.       கணக்கு வைத்து வாழ வேண்டும் (கணக்கு வைத்து வாழ்பவரிடம், கணக்கில்லாமல் செல்வம் சேரும். கணக்கு நோட் வைத்து தினமும் வரவு, செலவு கணக்கு எழுதி பார்க்க வேண்டும். நிச்சயமாக எழுத வேண்டும்.)
6.       அடிப்படை வாழ்வை முதலில் சேர்க்க வேண்டும் (வீடு, நிலம்). பின்பு தான் ஆடம்பர வாழ்விற்கு செல்ல வேண்டும் (கார், பங்களா).
7.       income ஒன்று இருந்தால் கண்டிப்பாக outgoing  ஒன்று இருக்க வேண்டும். அதாவது 1000 ரூபாய் சம்பாரித்தல் நிச்சயமாக 10 ரூபாய் தானம் செய்ய வேண்டும்.
8.       இரகசியம் காப்பாற்ற பட வேண்டும். (633வது திருக்குறளை படித்து தெரிந்து கொள்ளுங்கள்)
9.       யாரையும் போட்டியாக நினைக்க கூடாது. போட்டி தெய்வங்களுக்கு மிகப்பெரிய எதிரி.
10.   தன் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்க வேண்டும். கொள்கை பிடிப்போடு இருக்க வேண்டும். systematic ஆக இருக்க வேண்டும். (நேர கணக்கு போட வேண்டும்.)
6 மணி முதல் 7 மணி வரை – கலைக் கடன்கள், காப்பி, பேப்பர்
7 மணி முதல் 8 மணி வரை – குளியல், துணி சலவை
8 மணி முதல் 9 மணி வரை – உணவு, வேலைக்கு தயாராதல்
   இவ்வாறு உங்களுக்கு ஏற்றவாறு கணக்கு வைத்து பழக வேண்டும்.

11.   சொந்தங்களை தொழிலில் போடக்கூடாது. அவ்வாறு போட்டாலும் அன்பு வேறு, தொழில் வேறு என்று புரிய வைத்து, தொழிலில் எந்த விதமான குறைபாடுகளும் இல்லாமல் செய்ய வேண்டும். அவ்வாறு குறைபாடுகள் அல்லது தவறுகள் ஏற்பட்டால் கண்டிக்க வேண்டும். மீண்டும் நடந்தால் நிச்சயமாக அவர்களை தொழில் இருந்து நீக்க வேண்டும். ஏன் என்றால் அன்பு வேறு, தொழில் வேறு.

இவைகளை கடைபிடிப்பது சாதாரணம் அல்ல. அவ்வாறு கடைப்பிடித்தால் நிச்சயம் நாமும் குபேரர் அருள் பெறலாம்.