Saturday 20 December 2014

ஆதித்ய மந்திரம்

சூரிய பகவானின் திருவருளைப் பெற மந்திரம் அருளை பெற மந்திரம்




‘ஓம் ஆதித்யாய நம’




Lord Surya 
இந்த மந்திரம், ஆதவனின் அருளைப் பெற உதவும் மந்திரம் ஆகும். இம்மந்திரத்தை ஒரு வளர்பிறை ஞாயிறு தினத்தன்று காலையில், சூரிய ஹோரை நேரத்தில், கிழக்கு நோக்கி அமர்ந்து, 108 முறை சொல்லி சூரிய பகவானை வணங்க வேண்டும்.
இந்த ஆதித்ய மந்திரத்தை 108 முறைகள் சொல்வதால், நம் ஆன்மப் பிரகாசம் தூண்டப்பட்டு உடலும், மனமும், முகமும் தெளிவுடனும், சுறுசுறுப்பாகவும் இருக்கும். மன எழுச்சியினால் ஒருவரின் உள்ளொளியை அதிகரிக்க கூடிய மகத்தான சக்தி வாய்ந்த மந்திரம் இந்த ஆதவ மந்திரம் ஆகும்.
வளர்பிறை ஞாயிற்று கிழமையில் துவங்கி, தொடர்ந்து ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளிலும் இந்த மந்திரத்தை சொல்லி சூரிய பகவானை வணங்கலாம். முடியாதவர்கள், வளர்பிறை ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் இதைக் கடைப்பிடிக்கலாம்.

No comments:

Post a Comment